ஆர்யா எப்படி சுசிலீக்ஸில் சிக்காமல் போனார்?#SuchiLeaks
சென்னை: சுசிலீக்ஸில் நடிகர் ஆர்யா எப்படி சிக்காமல் போனார் என்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் ராம் கோபால் வர்மா பெயரில் ட்விட்டர் கணக்கு வைத்துள்ளவர்.
பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்களை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார். இதனால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இருப்பினும் அவர் தொடர்ந்து வீடியோக்களை வெளியிடும் நேரத்தை அறிவித்து வருகிறார். இதற்கிடையே அவர் பெயரில் ஏகப்பட்ட போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

தனுஷ்
சுசித்ராவின் அதிரடி ட்வீட்டுகளால் தனுஷின் இமேஜ் தான் டேமேஜாகிப் போய் கிடக்கிறது. ட்விட்டரில் அவரையும், அனிருத்தையும் வச்சு செஞ்சிட்டார் சுசித்ரா.

ஆர்யா
நடிகர் ஆர்யாவின் பெயர் அவ்வப்போது நடிகைகளின் பெயர்களுடன் கிசுகிசுக்கப்படும். இந்நிலையில் சுசிலீக்ஸில் அவர் எப்படி சிக்காமல் போனார் என்பதற்கான காரணத்தை இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

கடம்பன்
ஆர்யா #SuchiLeaks சுசிலீக்ஸில் சிக்கவில்லை. அவருக்கு படம் பண்ண, பார்க்கத் தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார் #KadambanTrailer looks என ட்வீட்டியுள்ளார் ராம் கோபால் வர்மா பெயரில் ட்விட்டர் கணக்கு வைத்துள்ளவர். இவரை போன்று பலரும் பிரபலங்களின் பெயரில் போலி கணக்கு துவங்கி ட்வீட்டுகிறார்கள். தனுஷின் பெயரில் அதுவும் வெரிபைட் கணக்கு என்று காட்டுகிற அளவுக்கு போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. அந்த போலி கணக்கில் ஒரு வில்லங்கமான மேட்டர் வேறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள்
ஆர்யா பாவம் அவர் பாட்டுக்கு ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வது, சைக்கிளில் நெடுதூரம் பயணம் செய்வது, ஒர்க்அவுட் செய்பவர்களை ட்விட்டரில் வாழ்த்துவது என்று உள்ளார்.


Click it and Unblock the Notifications











