கட்டாய வெற்றிக்காக 15 நாட்கள் முன்பே புரமோஷனை தொடங்கிய ஆர்யா
ஆர்யாவுக்கு சமீபகாலமாக தொட்டதெல்லாம் தோல்வியாக முடிகிறது. இந்நிலையில் அவர் பெரிதும் எதிர்பார்க்கும் கடம்பன் படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.
இதுவரை தன் படங்களின் புரமோஷன்களை பட ரிலீஸுக்கும் சில நாட்கள் முன்பே தொடங்குவார் ஆர்யா. ஆனால் இந்த படம் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பதால் புரமோஷனை சீக்கிரமே தொடங்கி விட்டார். 15 நாட்களுக்கு முன்பிருந்தே புரமோஷன் பண்ண ஐடியாவாம். கடம்பன் படம் பாதியில் இருந்தபோதே திட்டமிட்டதை விட செலவு அதிகமானதால் ஆர்யாவே கையில் எடுத்துக்கொண்டார்.

கடம்பன் ரிலீஸாகும் நாளில் தான் சிவலிங்காவும் பவர் பாண்டியும் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











