Don't Miss!
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கைது செய்யப்பட்ட போது சிரித்த ஆர்யான் கான்...செம வைரல் ஃபோட்டோ
மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளான். இதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்களின் குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்ட இந்த பார்ட்டியில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதை அறிந்து தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கப்பலில் சோதனை நடத்தி உள்ளனர். போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக ஆர்யான் கான் உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்யன் கான் போதை பொருள் விவகாரம்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட மேலும் 6 பேர் கைது!
ஆர்யான் கானுக்கு காவல்
ஆர்யான் கானின் வாட்ஸ்ஆப் சேட் உரையாடல் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் கோரிக்கையை ஏற்று, ஆர்யானின் காவலை இன்று வரை கோர்ட் நீட்டித்தது.
சிரித்தபடி சென்ற ஆர்யான்
இந்நிலையில் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற போது, போலீசாரின் வாகனத்தில் அமர்ந்து சிரித்தபடியே ஆர்யான் கான் சென்றதாக கூறப்படுகிறது. தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இரு புறமும் அமர்ந்திருக்க, நடுவில் மாஸ்க் அணியாமல் அமர்ந்திருக்கும் ஆர்யான் கான் சிரித்தபடி அமர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.
Recommended Video
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஆனால் நிஜமாகவே இது ஆர்யான் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ தானா, உண்மையிலேயே ஆர்யான் சிரித்த படி போலீசாருடன் சென்றாரா அல்லது எடிட்டிங் செய்யப்பட்டதா என தெரியவில்லை. ஆனால் இந்த ஃபோட்டோவை வைத்து ஆர்யான் கான் மற்றும் ஷாருக்கானை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.
கடும் கோபத்தில் நெட்டிசன்கள்
உங்க அப்பாவிற்கு இருக்கும் பண பலத்தை வைத்து, தப்பித்து விடலாம் என தைரியமா, எல்லா இடங்களிலும் லஞ்சம் ஊடுருவி இருப்பதால் பணத்தை கொடுத்து வெளியே வந்து விடலாம் என்ற திமிரில் உன்னால் சிரிக்க முடியும் என நெட்டிசன்கள் பலவகைகளில் கோபமாக கேள்வி கேட்டும், திட்டியும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
மன உளைச்சலில் ஷாருக்கான்
டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சல்மான் கான் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஷாருக்கானை நேரில் சந்தித்தும், போனில் பேசியும் இது தொடர்பாக பேசி வருகிறார்கள். மகன் கைது செய்யப்பட்டதால் கடும் மன உளைச்சலில் இருக்கும் தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என ஷாருக்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!