Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
'பாவக் கதைகளி'ல் திருநங்கை கேரக்டர்.. பாராட்டு மழையில் காளிதாஸ் ஜெயராம்.. செம ஹேப்பி!
சென்னை: மூன்றாம் பாலினத்தவர் கேரக்டரில் என் நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என காளிதாஸ் ஜெயராம் கூறியுள்ளார்.
ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் கடந்த 18 ஆம் தேதி வெளியான ஆந்தாலஜி படம், பாவக் கதைகள்.
மாஸ்.. கிளாஸ்.. சைக்கோ வில்லன்கள்.. 2020ல் ரசிகர்களை அலற விட்ட வில்லாதி வில்லன் யார்?
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், கவுதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் இயக்கிய படங்கள் இதில் இடம்பெற்றன/
சுதா கொங்கரா
ஆணவக் கொலையை மையமாக வைத்து இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டன. சுதா கொங்கராவின் தங்கம் கதை, காதலுக்கு உதவும் மூன்றாம் பாலினத்தவரின் மன உணர்வு மற்றும் குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவர் எப்படி நடத்தப்படுகிறார் என்கிற வலியை அழுத்தமாகச் சொல்லி இருந்தது.
என்ன செய்கிறது
விக்னேஷ் சிவனின் லவ் பண்ணா உட்ரணும் படம் காதலுக்கு எதிரான ஜாதி தலைவரின் அடாவடியை பேசுகிறது. கவுதம் மேனன் இயக்கி இருக்கும் வான் மகள், கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட மகளை, சமூகம் எப்படி பார்க்கிறது, அவர்களுக்காக குடும்பம் என்ன செய்கிறது என்பதை சொல்கிறது.
ஆணவக் கொலை
வெற்றி மாறனின் ஓர் இரவு, ஜாதி திமிறால் பெற்ற மகளையே ஆணவக் கொலை செய்யும் கொடுமைக்கார அப்பாவை பற்றிய கதை. இந்த கதைகளில், தங்கம் கதையில், காளிதாஸ் மூன்றாம் பாலினத்தவராக சிறப்பாக நடித்திருந்தார். இதில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது:
மகிழ்ச்சியா இருக்கு
சத்தார் என்ற கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பு வந்ததும், சிறப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அது நாடகத்தனமாக ஆகிவிடக்கூடாது என்று நினைத்தேன். அதன்படியே நடித்தேன். இப்போது படத்தை பார்த்துவிட்டு பலர் என் நடிப்பை பாராட்டினார்கள். பாராட்டி வருகிறார்கள். அது மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு கூறியிருக்கிறார்.