பவர் ஸ்டாருக்கு மச்சம் தான்: ஐஸ்வர்யா ராய் ஓகே சொல்லிவிட்டார்
சென்னை: பவர் ஸ்டார் சீனிவாசனுடன் சேர்ந்து நடிக்க ஐஸ்வர்யா ராய் ஒப்புக் கொண்டுள்ளார்.
பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு தற்போதுள்ள முன்னணி நாயகிகளுடன் நடிக்க அவ்வளவாக ஆர்வம் இல்லை. அவருக்கு உயர்ந்த நாயகி அனுஷ்கா. த்ரிஷா மற்றும் சமந்தா ஆகியோருடன் எல்லாம் நடிக்க விருப்பமில்லையாம்.
பவருக்கு முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் தான் நடிக்க விருப்பமாம். இதை நாங்கள் கூறவில்லை. அவரே அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவரது ரசிகர்களும் ஃபேஸ்புக்கில் ஐஸ், பவர் போட்டோவை இணைத்துப் போட்டு சூப்பர் ஜோடி என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.

குசும்புக்கார பவர்
பவர் எதைக் கூறினாலும் யாரும் அவரை சீரியஸாக எடுத்துக்கொள்ளாததால் அவர் உள்ளூரில் கொடி கட்டிப் பறக்கும் நாயகிகள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளதையும் யாரும் பொருட்படுத்தவில்லை.

சூப்பர் ஸ்டாருக்கே படியல
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல ஆண்டுகள் முயற்சி செய்து இறுதியில் அமிதாப் பச்சன் மூலம் ஐஸ்வர்யா ராயை தன்னுடன் நடிக்க வைத்தார்.

பவருக்கு ஓகே சொன்ன ஐஸ்
பவர் பேட்டி கொடுத்த நேரமோ என்னவோ தெரியவில்லை ஐஸ்வர்யா ராய் அவருடன் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

ஏப்ரல் ஃபூல்...
இந்த நியூஸை நீங்க நம்பியிருந்தால்.. ஏப்ரல் ஃபூல்!!!


Click it and Unblock the Notifications











