Don't Miss!
- News ஷாக்கிங்! அமெரிக்கா சொன்னதையே கேட்காத இஸ்ரேல்.. உலக நாடுகளை 3ம் உலகப்போருக்கு இழுக்கும் நெதன்யாகு?
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தெலுங்கிலும் கலக்க ரெடி.. அசோக் செல்வனின் அடுத்த மூவ் !
சென்னை : வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அசோக் செல்வன் தெலுங்கு திரையுலகில் கால்பதிக்க உள்ள தகவல் கோலிவுட்டில் பரவி வருகிறது.
அசோக் செல்வன் சூது கவ்வும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகர். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் நடித்து வருகிறார். சூது கவ்வும் படத்தில் நடித்த பிறகு இவர் ஹீரோவாக நடித்த படம் பீட்சா 2 இப்படம் சுமார் ஆகவே இருந்தது.
தனது அடுத்த படமான தெகிடியில் வித்தியாசமாக நடித்தார் பலரது கவனத்தை ஈர்த்தார். இதன் பின் ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி போன்ற படங்களில் நடித்து வந்த இவர். மீண்டும் அனைவரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படம் கூட்டத்தில் ஒருத்தன் படம் தான்.
இவர் தற்போது ஓ மை கடவுளே படத்தில் நடித்து வருகிறார். அஸ்வத் மாரிமுத்து இயக்கி வந்த இதில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் அடுத்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்று ஒரு செய்தி கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது. அனி சசி இயக்கும் ஒரு படத்தில் செஃப் ஆக நடிக்கிறார் அதில் அவருடன் நித்யா மேனன் மற்றும் ரித்து வர்மா நடிக்கின்றனர்.
இப்படி பட்ட ஒரு கதை தெலுங்கு சினிமாவில் பார்த்தது கிடையாது என்றே பலரும் கூறுகின்றனர். இது போல அசோக் செல்வன் வித்தியாசமான கதையை தேர்வு செய்து படத்தின் வெற்றிக்கு உதவும் என்று பலரால் சொல்லப்படுகிறது.