இப்படி ஒரு திறமையா… வாயைப் பிளந்த அசோக் செல்வன்

சென்னை : வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்து வெளியான படம் மன்மதலீலை. கடந்த வாரம் ரிலீசான அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் நடிகர் அசோக்செல்வன். தரமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

அசோக் செல்வன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ரீட்வீட் செய்துள்ளார். அதில் ஒரு பெண்ணின் திறமையை வெளியே பலருக்கும் தெரியும் படி செய்துள்ளார்.

Slow and study

Slow and study

2012 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலமாக சினிமா துறைக்கு அறிமுகமானவர் அசோக் செல்வன். நலன் குமாரசாமி இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா போன்ற நடிகர்களுடன் சேர்ந்து ரகளை செய்து இருப்பார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு பல இளம் இயக்குனர்களின் பார்வை அசோக் செல்வன் மீது விழுந்தது. ஆனாலும் வரும் படங்களை எல்லாம் ஒப்புக்கொள்ளாமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர். பீட்சா 2 தெகிடி, கூட்டத்தில் ஒருவன், சம் டைம்ஸ், ஓ மை கடவுளே போன்ற தரமான படங்களைத் தந்தவர். ஒன்பது வருட காலங்களில் வெறும் 13 படங்களில் நடித்துள்ளார். நிதானமாக வந்தாலும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருபவர்.

கெட்ட பெயர் வாங்கி தரும் படம்

கெட்ட பெயர் வாங்கி தரும் படம்

மன்மதலீலை படத்திற்கு முன்பு அவர் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் ஓ மை கடவுளே. படம் சூப்பர்ஹிட் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே தெரிந்த அசோக் செல்வன் பெருவாரியான மக்களிடம் கொண்டு சேர்த்த படம். ஆனால் மன்மத லீலை திரைப்படம் அதற்கு முற்றிலும் எதிராக வந்திருக்கும் படம். மன்மதலீலை படத்தால் மக்களிடம் கெட்ட பெயர் வரும் என பல பேர் தன்னிடம் சொன்னதாகவும், ஆனால் இது அப்படியான படம் இல்லை நீங்கள் வந்து பார்த்த பிறகு சொல்லுங்கள் என அசோக் செல்வன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். கடந்த வாரம் ரிலீசான இந்த படத்தின் ரிசல்ட் ஓ மை கடவுளே படத்திற்குக் கிடைத்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம்

குறும்படங்கள்

குறும்படங்கள்

அசோக் செல்வன் ஆரம்ப காலங்களில் பல குறும்படங்களில் நடித்துள்ளார். Life and death of rebel, sarithiran, Network error, 75% மற்றும் பிளாக் எனும் குறும்படத்தை எழுதி இயக்கியும் உள்ளார். அசோக் செல்வன் நடித்து அனைவருக்கும் தெரிந்த படம் சூதுகவ்வும். ஆனால் அதற்கு முன்னரே பில்லா 2 படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கிறார்.

Wow

Wow

மங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் ஆதி ஸ்வரூபா 11 விதமாக எழுதக்கூடியவர். அவரது மூளையின் இரு பகுதிகளும் ஒரே நேரத்தில் இயங்கக் கூடியவை. லட்சத்தில் ஒருவருக்குத்தான் இப்படிப்பட்ட திறமை இருக்கும். இதை Ambidexterity என சொல்கின்றனர். இந்த தகவலை அசோக் செல்வன் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீட்வீட் செய்து இவரது திறமை பலருக்கும் தெரியும் படி செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X