Don't Miss!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- News வெறும் 15 நிமிடம் தான்.. உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையால் புதுச்சேரி இளைஞர் பலி.. என்ன நடந்தது?
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மாயநதி படத்திற்காக உண்மையான ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றிய ஹீரோ
சென்னை : நடிகர் அபிசரவணன் முக்கிய நாயகனாக நடித்திருக்கும் படம் தான் மாயநிதி இந்த படம் வரும் ஜனவரி 31 வெளியாகிறது. படத்தை இயக்கி தயாரித்து இருக்கிறார் அசோக் தியாகராஜன் .படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் வெண்பா ,அப்புக்குட்டி,இளவரசு மற்றும் ஹரீஸ் உத்தமன் நடித்துள்ளனர் .
நடிகர் அபிசரவணன் பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் ,இவர் அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.அதற்கு பிறகு குட்டி புலி படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார் .இதன் பின் முன்னனி கதாபாத்திரத்தில் கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்தார் .இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை .அதற்கு பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து இயக்கிய டூரிங் டாக்கீஸ் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் .
இதன் பின் பிரசாந்தின் சாகசம் படத்திலும் நடித்து இருந்தார் .இதற்கு பிறகு இவர் நாயகனாக நடித்த பட்டதாரி படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .இப்படி சரியான வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் அபிசரவணனுக்கு முக்கியமான படம் தான் இந்த மாயநதி படம் .
ஸ்டார் ஹீரோயினை சும்மா வருவது போல் காட்டுவதா? அதிரடியாக பாடல் காட்சியை சேர்த்த இயக்குனர் ராஜமவுலி
இதற்கு பிறகு படப்பிடிப்பு மாயவரம் பகுதிகளில் நடைபெற இருந்ததால், மாயவரம் சுற்றிய இடங்களில் 15 நாட்களுக்கு மேல் ஆட்டோ ஓட்டினாராம் அபிசரவணன் .இப்படி ஆட்டோ ஓட்டும் போது அவரே கிட்டதட்ட ஒருநாளில் 1000ரூபாய் வரை சம்பாரித்ததாக கூறினார் .மேலும் பல மக்களின் உணர்வுகள் பற்றியும் வாழ்கை முறை பற்றியும் தெரிந்து கொண்டதாக சமீபத்திய பேட்டியில் கூறினார்.