Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நல்லவேளை தடுப்பூசி போட்டேன்… இல்லைனா விபரீதமாகி இருக்கும்.. கொரோனாவிலிருந்து மீண்ட அஸ்வின் ககுமனு !
சென்னை : தமிழ் சினிமாவில் குணசித்திர வேடத்திலும் ஒரு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் அஸ்வின் ககுமனு.
இவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார்.
முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பெரிய விபரீதத்தில் இருந்து தப்பித்ததாக கூறியுள்ளார்.
அறிமுகம்
நடுநிசி நாய்கள் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் அஸ்வின் ககுமனு. ஆனால் அந்த திரைப்படம் இவருக்கு பெயரை பெற்றுத் தரும் திரைப்படமாக அமையவில்லை. இதையடுத்து, மங்காத்தா திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் அனைவருக்கும் தெரிந்த முகமானார்.
பாதிக்கப்பட்டேன்
இவர் கடந்த மாதம் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டதாகவும் அப்போது குடும்பத்தினர் எதிர்கொண்ட கஷ்டங்களையும் அவர் கூறியுள்ளார். நான் ஏப்ரல் 3 ஆம் தேதி கொரோனா தடுப்பூசியின் போட்டுக்கொண்டேன். இரண்டாவது தடுப்பூசி போடுவதற்குள் நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். CT ஸ்கேனில் நுரையீரலில லேசான தொற்று இருந்ததால், 4 நாள் தீவிர கண்காணிப்பில் இருந்தேன். நான் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால் என் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும் என்று கூறினார்.
மிகவும் பயந்தேன்
மேலும் என்னையும் என் குழந்தையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு என் மனைவியின் தோளில் விழுந்தது. என் மகளும் 3 நாள் காய்ச்சலில் இருந்தாள், என் மனைவிக்கும் வாசனை தெரியவில்லை. முதல் இரண்டு நாட்கள் நான் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். என் குழந்தைக்கும் என் மனைவிக்கும் விபரீதமாக எதாவது நடந்து விடுமோ என்று பயந்தேன்.
தடுப்பூசி போடுங்கள்
நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது, சிறிது அலட்சியமாக இருந்தால் உறவுகைள இழந்துவிடுவோம். நம்மை காத்துக்கொள்ள தடுப்பூசி போடுவது, முகமூடி அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்வது மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க சிறந்த வழி தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று அஸ்வின் ககுமனு கூறியுள்ளார்.