Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடிக்க இருந்தது அவர்தானாம்.. முதல் முறையாக மனம் திறந்த இயக்குநர்!
சென்னை: பிரேமம் படத்தில் மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்தவர் குறித்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் இயக்குர் அல்போன்ஸ் புத்திரன்.
கடந்த 2015ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தின்
அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலையும் குவித்தது.
பிரேமம் படம்
இந்நிலையில் படத்தின் இயக்குநரான அல்போன்ஸ் புத்திரன், சமூக வலைதளம் மூலம் ரசிகர்களிடம் உரையாற்றினார். அப்போது பிரேமம் படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள முடியவில்லை
அதாவது, பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அசினைதான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இதற்கு நிவின் பாலியும் ஒப்புக்கொண்டாராம். ஆனால் அசினை மட்டும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
சாய் பல்லவி ஒப்பந்தம்
அல்போன்ஸ் புத்திரனும் நிவின் பாலியும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் அசினை பிடிக்க முடியவில்லையாம். அதன்பிறகே அந்த கதாப்பாத்திரத்திற்கு நடிகை சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்தார்களாம்.
தமிழகத்தில் படிப்பு
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் சிறு வயதில் ஊட்டியில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தாராம். அதோடு கல்லூரி படிப்பை சென்னையில் தான் படித்தாராம். அதனால் தமிழ் நன்கு அறிந்தவராகவும் உள்ளார்.
நயன் ஃபகத் பாசில்
அல்போன்ஸ் புத்திரன் தற்போது பாட்டு என்ற படத்தி இயக்குகிறார். இதற்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்தப் படத்தில் ஃபகத் பாசில் மற்றும் நயன்தாரா லீடிங் ரோலில் நடிக்கின்றனர். அல்போன் தனக்கு ரஜினிக்காந்தை இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருப்பதாக அண்மையில் கூறியது குறிப்பிடத்தக்கது.