For Daily Alerts
Don't Miss!
- News உயிரைக் கொல்லும் ஸ்மோக் பிஸ்கட்! இவ்வளவு பாதிப்பு தருமா? தடை எப்போது?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏமாந்த கனடா வாலிபர்: ஆசின் வேதனை! எனது புகைப்படத்தைப் பார்த்து ஊனமுற்ற பெண்ணிடம் ஏமாந்த கனடா நாட்டு இளைஞருக்கு எனது ஆழ்ந்தவருத்தங்களைத் தெரிவிப்பதாக நடிகை ஆசின் கூறியுள்ளார்.கோவையைச் சேர்ந்த பூங்கொடி என்ற ஊனமுற்ற பெண், நடிகை ஆசினின் படத்தை தனது படமாக கூறி கனடாநாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் செளந்தர் என்பவரை ஏமாற்றி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களைசுருட்டிய செய்தியை நாம் நேற்று வெளியிட்டோம்.இச் சம்பவம் குறித்து ஆசின் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என் படத்தை நம்பி கனடா நாட்டு வாலிபர் ஏமாந்தது குறித்து அறிந்துஅதிர்ச்சி அடைந்தேன். அவருக்காக அனுதாபப்படுகிறேன். இது எனக்கு வேதனையைக் கொடுத்துள்ளது.அந்தப் பெண் அப்பாவித்தனமாக செய்திருந்தாலும் ஒரு நபரை ஏமாற்றியது மிகவும் தவறானது,வேதனையானது. இதுபோன்ற தொழில்நுட்ப மோசடிகளை யாரும் தடுக்க முடியாது. எனவே இதுபோன்றமோசடிகளிலிருந்து நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அந்த ஊனமுற்ற பெண்ணின் நிலையும் மோசமானதுதான். ஒவ்வொருவரும் நேர்மையாக, மனசாட்சியுடன் நடக்க வேண்டும் என்பதையே இச் சம்பவம் உணர்த்துகிறது. எனது படத்தால் ஒரு இலங்கைத் தமிழர் ஏமாற நேர்ந்ததற்காக நான் ரொம்பவே வருத்தப்பட்டேன் என்றார் ஆசின்.
News
-Staff
By Staff
|
எனது புகைப்படத்தைப் பார்த்து ஊனமுற்ற பெண்ணிடம் ஏமாந்த கனடா நாட்டு இளைஞருக்கு எனது ஆழ்ந்தவருத்தங்களைத் தெரிவிப்பதாக நடிகை ஆசின் கூறியுள்ளார்.
கோவையைச் சேர்ந்த பூங்கொடி என்ற ஊனமுற்ற பெண், நடிகை ஆசினின் படத்தை தனது படமாக கூறி கனடாநாட்டைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் செளந்தர் என்பவரை ஏமாற்றி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களைசுருட்டிய செய்தியை நாம் நேற்று வெளியிட்டோம்.
இச் சம்பவம் குறித்து ஆசின் அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, என் படத்தை நம்பி கனடா நாட்டு வாலிபர் ஏமாந்தது குறித்து அறிந்துஅதிர்ச்சி அடைந்தேன். அவருக்காக அனுதாபப்படுகிறேன். இது எனக்கு வேதனையைக் கொடுத்துள்ளது.
அந்தப் பெண் அப்பாவித்தனமாக செய்திருந்தாலும் ஒரு நபரை ஏமாற்றியது மிகவும் தவறானது,வேதனையானது. இதுபோன்ற தொழில்நுட்ப மோசடிகளை யாரும் தடுக்க முடியாது. எனவே இதுபோன்றமோசடிகளிலிருந்து நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த ஊனமுற்ற பெண்ணின் நிலையும் மோசமானதுதான். ஒவ்வொருவரும் நேர்மையாக, மனசாட்சியுடன் நடக்க வேண்டும் என்பதையே இச் சம்பவம் உணர்த்துகிறது. எனது படத்தால் ஒரு இலங்கைத் தமிழர் ஏமாற நேர்ந்ததற்காக நான் ரொம்பவே வருத்தப்பட்டேன் என்றார் ஆசின்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: asin expresess shock
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004