Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
ரிசார்ட்டில் என்ன வேலைனு எம்.எல்.ஏ.க்களை புடுச்சு கேளுங்க மக்களே: அரவிந்த்சாமி
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் தாமாக ரிசார்ட்டில் தங்கியிருந்தால் வேலை பார்க்காமல் அங்கே என்ன செய்கிறீர்கள் என்று மக்கள் அவர்களை கேட்க வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏ.க்களை பேருந்துகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போய் கூவாத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்துள்ளனர். எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை அவர்களாகவே இங்கு வந்து தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
எம்.எல்.ஏ.க்கள்
எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2 நாட்களாக தாமாகவே ரிசார்ட்டில் தங்கியிருந்தால் வேலை பார்க்காமல் அங்கே என்ன செய்கிறீர்கள் என்று மக்கள் அவர்களை கேட்க வேண்டும்.
|
வேலை
எம்.எல்.ஏ.க்கள் வேலைக்கு திரும்ப வேண்டும். தொகுதி மக்களுடன் கலந்து பேசி யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.
|
ரிசார்ட்
கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், தாமாகவா வந்தீர்கள் என்று ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் கேட்பதில் பலன் இல்லை என அரவிந்த் சாமி ட்வீட்டியுள்ளார்.
அதிரடி
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து அரவிந்த் சாமி அவ்வப்போது ட்வீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே தற்போதைய நிலைக்கு சரியான தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.