Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
ரஜினி படத்தைத் தயாரிக்கிறேனா? - ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம்
சூப்பர் ஸ்டார் ரஜினியைச் சந்தித்தது உண்மைதான். ஆனால் அவர் நடிக்கும் புதுப் படத்தை நான் தயாரிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதுப் படம் குறித்து ஏகப்பட்ட செய்திகள், வதந்திகள், யூகங்கள் வெளியாகி வருகின்றன.
ஏ ஆர் முருகதாஸ்
சமீபத்தில் அப்படி வெளியான ஒரு செய்தி.. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன் என்பது.
ஊரெங்கும் பேச்சு
இந்த செய்தி வெளியானதிலிருந்து ரஜினி ரசிகர்கள் அந்தப் படம் குறித்து பரவலாகப் பேச ஆரம்பித்தனர். இந்தப் படம் லிங்காவை வைத்து பிரச்சினை கிளப்பியவர்களுக்கு பெரும் பதிலடியாக அமைய வேண்டும் என்று கூறி வந்தனர்.
ஆஸ்கர் விளக்கம்
இந்த நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அதில் இப்படி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
சந்தித்தது உண்மைதான்
ரஜினி நான் சந்தித்தது உண்மைதான். ஆனால் அது படம் தயாரிப்பது குறித்து பேச அல்ல. அவருக்கு நன்றி தெரிவிக்கவே. தெலுங்கில் ஐ படம் வெளியாக அவர் பெரும் உதவி செய்தார். மற்றபடி அவர் படத்தைத் தயாரிப்பது குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.