Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தியா திருட்டு கதை - உதவி இயக்குநர் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை : ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடித்த 'தியா' படத்தின் கதை தன்னுடையது எனவும் அதை எப்படியோ திருடி படமாக எடுத்துவிட்டார்கள் என உதவி இயக்குநர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
'தியா' திரைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த டைட்டில் 'கரு'. கரு எனும் டைட்டிலை வேறு ஒருவர் முன்னரே பதிவு செய்திருந்ததாக சர்ச்சையானதையடுத்து, டைட்டில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'தியா' திரைப்படம், அழிக்கப்பட்ட கரு ஒன்று தன்னை அழிக்க துணைபுரிந்தவர்களை பழிவாங்குவதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில், உதவி இயக்குநர் சந்திரகுமார் 'தியா' படத்தின் கதை தன்னுடையது என குற்றம் சாட்டியுள்ளார். 'கருவிலேயே அழிக்கப்பட்ட ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தனது அழிவுக்குக் காரணமான அனைவரையும் எப்படி பழிவாங்குகிறது என்பதே 2015-ம் ஆண்டு தான் எழுதிய கதை எனக் கூறியுள்ளார் சந்திரகுமார்.
தான் எழுதிய கதையை பலரிடம் கூறியுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தக் கதையில் நடிக்க இயக்குநரும் நடிகருமான ராஜகுமாரன் ஒப்புக்கொண்டாராம். தற்போது தியா படத்தின் விமர்சனங்களைப் படித்து அதிர்ச்சியாகி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால் அப்படியே தனது கதையை எடுத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
தான் பலரிடமும் கூறிய கதை எப்படியோ இயக்குநர் விஜய் காதுக்குச் சென்று அதைப் படமாக எடுத்திருக்கக் கூடும். இது எனது கதை என நிரூபிக்க நான் அப்போது போனில் கதை சொன்ன ஆதாரங்கள் இருக்கின்றன. 'தியா' திருட்டுக்கதை எனும் உண்மை அனைவருக்கும் தெரியவேண்டும் எனக் கூறியுள்ளார்.
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்