Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தியா திருட்டு கதை - உதவி இயக்குநர் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை : ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடித்த 'தியா' படத்தின் கதை தன்னுடையது எனவும் அதை எப்படியோ திருடி படமாக எடுத்துவிட்டார்கள் என உதவி இயக்குநர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
'தியா' திரைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த டைட்டில் 'கரு'. கரு எனும் டைட்டிலை வேறு ஒருவர் முன்னரே பதிவு செய்திருந்ததாக சர்ச்சையானதையடுத்து, டைட்டில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'தியா' திரைப்படம், அழிக்கப்பட்ட கரு ஒன்று தன்னை அழிக்க துணைபுரிந்தவர்களை பழிவாங்குவதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில், உதவி இயக்குநர் சந்திரகுமார் 'தியா' படத்தின் கதை தன்னுடையது என குற்றம் சாட்டியுள்ளார். 'கருவிலேயே அழிக்கப்பட்ட ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தனது அழிவுக்குக் காரணமான அனைவரையும் எப்படி பழிவாங்குகிறது என்பதே 2015-ம் ஆண்டு தான் எழுதிய கதை எனக் கூறியுள்ளார் சந்திரகுமார்.
தான் எழுதிய கதையை பலரிடம் கூறியுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தக் கதையில் நடிக்க இயக்குநரும் நடிகருமான ராஜகுமாரன் ஒப்புக்கொண்டாராம். தற்போது தியா படத்தின் விமர்சனங்களைப் படித்து அதிர்ச்சியாகி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால் அப்படியே தனது கதையை எடுத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
தான் பலரிடமும் கூறிய கதை எப்படியோ இயக்குநர் விஜய் காதுக்குச் சென்று அதைப் படமாக எடுத்திருக்கக் கூடும். இது எனது கதை என நிரூபிக்க நான் அப்போது போனில் கதை சொன்ன ஆதாரங்கள் இருக்கின்றன. 'தியா' திருட்டுக்கதை எனும் உண்மை அனைவருக்கும் தெரியவேண்டும் எனக் கூறியுள்ளார்.