Don't Miss!
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
தியா திருட்டு கதை - உதவி இயக்குநர் குற்றச்சாட்டு
Recommended Video
சென்னை : ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடித்த 'தியா' படத்தின் கதை தன்னுடையது எனவும் அதை எப்படியோ திருடி படமாக எடுத்துவிட்டார்கள் என உதவி இயக்குநர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
'தியா' திரைப்படத்திற்கு முன்பு வைக்கப்பட்டிருந்த டைட்டில் 'கரு'. கரு எனும் டைட்டிலை வேறு ஒருவர் முன்னரே பதிவு செய்திருந்ததாக சர்ச்சையானதையடுத்து, டைட்டில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள 'தியா' திரைப்படம், அழிக்கப்பட்ட கரு ஒன்று தன்னை அழிக்க துணைபுரிந்தவர்களை பழிவாங்குவதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில், உதவி இயக்குநர் சந்திரகுமார் 'தியா' படத்தின் கதை தன்னுடையது என குற்றம் சாட்டியுள்ளார். 'கருவிலேயே அழிக்கப்பட்ட ஓர் உயிர் 5 வருடங்களுக்குப் பிறகு தனது அழிவுக்குக் காரணமான அனைவரையும் எப்படி பழிவாங்குகிறது என்பதே 2015-ம் ஆண்டு தான் எழுதிய கதை எனக் கூறியுள்ளார் சந்திரகுமார்.
தான் எழுதிய கதையை பலரிடம் கூறியுள்ளதாகக் கூறியுள்ளார். அந்தக் கதையில் நடிக்க இயக்குநரும் நடிகருமான ராஜகுமாரன் ஒப்புக்கொண்டாராம். தற்போது தியா படத்தின் விமர்சனங்களைப் படித்து அதிர்ச்சியாகி தியேட்டருக்குச் சென்று படம் பார்த்தால் அப்படியே தனது கதையை எடுத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
தான் பலரிடமும் கூறிய கதை எப்படியோ இயக்குநர் விஜய் காதுக்குச் சென்று அதைப் படமாக எடுத்திருக்கக் கூடும். இது எனது கதை என நிரூபிக்க நான் அப்போது போனில் கதை சொன்ன ஆதாரங்கள் இருக்கின்றன. 'தியா' திருட்டுக்கதை எனும் உண்மை அனைவருக்கும் தெரியவேண்டும் எனக் கூறியுள்ளார்.