தமிழகத்திலிருந்து விரட்டப்பட்ட டேம் 999-க்கு ஜகார்த்தா விழாவில் 3 டம்மி விருதுகள்!

டேம் 999 என்ற படத்தை சோகன்ராய் என்ற மலையாள இயக்குநர் இயக்கியிருந்தார்.
இந்தப் படம் தமிழர்களின் வாழ்வாதாரமான முல்லைப்பெரியாறு அணையை குறி வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த அணை பாதுகாப்பற்றது, உடைந்து விடும், மக்களின் உயிருக்கு ஆபத்து என்ற பொய்ப் பிரச்சாரமே படத்தில் மேலோங்கியிருந்தது.
எனவே அந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட முடியாது என தடை செய்தது தமிழக அரசு. ஆனால் பிற மாநிலங்களில் இந்தப் படம் வெளியானபோது, படுதோல்வியைத் தழுவியது.
சொந்த மாநிலம் கேரளாவிலேயே ஒரு வாரம்தான் தாக்குப் பிடித்தது இந்தப் படம்.
அத்துடன், விருதுக்கென்று எங்கெல்லாமோ அனுப்பிப் பார்ததார்கள். ஆஸ்கர் உள்ளிட்ட அத்தனை விழாக்களிலும் இந்தப் படத்துக்கு எந்த விருதும் தரப்படவில்லை.
கடைசியில் பெரிதாக பேசப்படாத ஜகார்த்தா திரைப்பட விழாவில் நடுவர் விருதுகள் என்ற பெயரில் 3 விருதுகளைத் தந்துள்ளனர். இது மக்கள் தெரிவல்ல. விழாவின் நடுவர்களாகப் பார்த்து தரும் விருதுகள். இது எந்த அளவு நடுநிலையுடன் வழங்கப்பட்டது அல்லது வாங்கப்பட்டது என்பதையெல்லாம் அவரவர் கற்பனைக்கே விட்டுவிடலாம்!


Click it and Unblock the Notifications











