Don't Miss!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- News சூரத் தொகுதியில் பாஜக வெற்றி.. அப்பட்டமான சதி! அம்பலப்பத்திய பத்திரிகையாளர் ஷாம்!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கிறாரா அதர்வா!?
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமான ஒருவர் அதர்வா. இவர் மறைந்த பிரபல நடிகர் முரளியின் மகன்.
நல்ல நல்ல கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவும் உள்ளது.
அடுத்ததாக அதர்வா மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த புரட்சி நாயகன் அதர்வா தான்... புகழும் ராஜமோகன்
கிடப்பில் உள்ளது
அதர்வா தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே படத்த்தில் நடித்து முடித்துள்ளார். அதையடுத்து ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்து வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் கிடப்பில் உள்ளது. ராஜா மோகன் இயக்கத்தில் அட்ரஸ் படத்திலும் நடித்துள்ளார்.
சிங்கிள் டேக்
இதுமட்டுமின்றி Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படத்தில் அதர்வா - சாம் ஆண்டன் கூட்டணி மீண்டும் சேர்ந்துள்ளது. இந்த படத்தில் ரசிகர்களை வாய் பிளக்க வைக்கும் வகையில் சிங்கிள் டேக்கில் ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ் சினிமா வட்டாரங்கள் இது குறித்து பரபரப்பாக பேசின.
மலையாள படம்
இந்நிலையில் கடந்த ஆண்டு மலையாள மொழியில் வெளியான அஞ்சாம் பாத்திரா படத்தின் தமிழ் ரீமேக்கில் அதர்வா நடிக்கவுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஆறாம் பாத்திரா என்ற தலைப்பில் தயாராகி வருகிறது.
கொடூரமான கொலைகள்
கொடூரமான முறையில் தொடர்ந்து கொலைகள் செய்யும் சீரியல் கில்லரின் கதையே அஞ்சாம் பாத்திரா. இந்த படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் ரீமேக் செய்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பத்ம விருதுகள் வழங்கும் விழா.. குடியரசுத் தலைவர் கைகளால் விருதை பெற்றுக்கொண்டார் உஷா உதுப்
-
Ghilli Box Office: 3 நாளும் வெறித்தனம்.. ரீ ரிலீஸில் மரண மாஸ் காட்டும் கில்லி.. இத்தனை கோடி வசூலா?
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!