Don't Miss!
- News கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு.. வைகையில் இன்று முதல் தண்ணீர் திறப்பு
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அதர்வா முரளி..'பாணா காத்தாடி' பத்ரி வெங்கடேஷுக்கு முதல் படம்
சென்னை: ஈட்டி வெற்றியால் கிக்காஸ் எண்டர்டெயின்மெண்ட் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார் நடிகர் அதர்வா முரளி.
இந்த நிறுவனத்தின் முதல் படத்தை பாணா காத்தாடி மூலம் நடிகர் அதர்வாவை திரையுலகில் அறிமுகம் செய்த இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார்.
திறமையான அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்துடன் இந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கும் அதர்வா ஆண்டுக்கு 2 பட்ஜெட் படங்களை இந்நிறுவனத்தின் மூலம் தயாரிக்க விருக்கிறார்.
Super happy and excited about #kiickass Entertainment . It's gonna be a good year ahead. @dirbadri pic.twitter.com/NKiQacHrgL
— Atharvaa Murali (@Atharvaamurali) January 1, 2016
தனது நிறுவனத்தின் முதல் படத்தில் நடிக்கும் அதர்வா முரளி இந்தப் படத்தில் வாய்ப்பின்றி தவிக்கும் திறமையான கலைஞர்களை தமிழ்த் திரையுலகில் அறிமுகம் செய்ய எண்ணியிருக்கிறார்.
தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த அதர்வா முரளிக்கு ஈட்டி மிகப்பெரிய வெற்றியைப் பரிசளித்திருக்கிறது.இதனால் உற்சாகமாக தயாரிப்பு நிறுவனத்தில் கால் பதித்திருக்கிறார் அதர்வா.
இவர் தற்போது ருக்குமணி வண்டி வருது, கணிதன் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.