Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சற்குணத்தையும் அதர்வாவையும் இந்த சண்டிவீரன்தான் காப்பாத்தணும்!
சென்னை: தொடர்ந்து சறுக்கி வரும் அதர்வா பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும் படம் சண்டி வீரன். படத்தின் ட்ரைலர் பார்த்தபோது, அதர்வாவின் நம்பிக்கையில் தவறில்லை என்றுதான் தோன்றியது.
நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புக் குதிரை என்று இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் வரிசையாகத் தோல்வியைத் தழுவி வருகின்றன.
பாலாவின் நடிப்பில் வெளிவந்த பரதேசி படம் தோல்வி வரிசையில் இணைந்தாலும் பரதேசியில் நடித்ததற்காக அதர்வாவுக்கு நல்ல பெயரும் பாராட்டுகளும் ஒருசேரக் கிடைத்தன. அடுத்தடுத்து வரிசையாக படங்கள் குவிந்தாலும் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி ஒருபடமும் வெற்றிப் படமாக அமையாத நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் படத்தில் நடித்து வருகிறார்.
களவாணி மற்றும் வாகை சூடவா போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குநர் சற்குணத்துக்கும் சண்டி வீரன்தான் பெரிய நம்பிக்கை. நய்யாண்டியில் இழந்த பெயரை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில்.
ஆக, சற்குணம், அதர்வா இருவருக்குமே சண்டி வீரன் முக்கிய படம்.