Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சற்குணத்தையும் அதர்வாவையும் இந்த சண்டிவீரன்தான் காப்பாத்தணும்!
சென்னை: தொடர்ந்து சறுக்கி வரும் அதர்வா பெரிதும் நம்பிக் கொண்டிருக்கும் படம் சண்டி வீரன். படத்தின் ட்ரைலர் பார்த்தபோது, அதர்வாவின் நம்பிக்கையில் தவறில்லை என்றுதான் தோன்றியது.
நடிகர் முரளியின் மகனான அதர்வா பாணா காத்தாடி படம் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புக் குதிரை என்று இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் வரிசையாகத் தோல்வியைத் தழுவி வருகின்றன.
பாலாவின் நடிப்பில் வெளிவந்த பரதேசி படம் தோல்வி வரிசையில் இணைந்தாலும் பரதேசியில் நடித்ததற்காக அதர்வாவுக்கு நல்ல பெயரும் பாராட்டுகளும் ஒருசேரக் கிடைத்தன. அடுத்தடுத்து வரிசையாக படங்கள் குவிந்தாலும் தமிழில் சொல்லிக் கொள்ளும்படி ஒருபடமும் வெற்றிப் படமாக அமையாத நிலையில் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் சண்டி வீரன் படத்தில் நடித்து வருகிறார்.
களவாணி மற்றும் வாகை சூடவா போன்ற நல்ல படங்களை கொடுத்த இயக்குநர் சற்குணத்துக்கும் சண்டி வீரன்தான் பெரிய நம்பிக்கை. நய்யாண்டியில் இழந்த பெயரை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில்.
ஆக, சற்குணம், அதர்வா இருவருக்குமே சண்டி வீரன் முக்கிய படம்.