நெகடிவ் ஆகிட்டேன்...கொரோனாவில் இருந்து மீண்டார் அதர்வா
சென்னை : கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக துவங்கியது சமயத்தில் அதர்வாவிற்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு விட்டார்.
ஏப்ரல் 16 அன்று சான் ஆன்டன் உடனான படத்தின் டப்பிங் வேலைகளை முடித்து விட்டு ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார். அடுத்த நாளே, சில அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்ததில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக அதர்வா அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்ட அதர்வா, தேவையான முன்னெச்சரிக்கை மருந்துகளை எடுத்துக் கொண்டார். கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்து வந்தார். தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக அதர்வா தெரிவித்துள்ளார்.

பரிசோதனை செய்ததில் கொரோனா நெகடிவ் என வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதர்வா பதிவிட்ட பதிவில், எனக்கு கொரோனா தொற்று நெகடிவ் ஆகி விட்டது. உங்கள் அனைவரின் அன்பு மற்றும் பிரார்த்தனைகளுக்கு நன்றி. இப்போது நன்றாக உணர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.மற்றவர்களுக்கு என்னை போல் சரியாகவில்லை என்பது தெரியும். இந்த வைரசால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருக்கும் எனது பிரார்த்தனைகள் இருக்கும். தயவு செய்து கவனமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள் என்றார்.
Recommended Video
அதர்வா, பல நிறுவனங்களின் தயாரிப்புக்களில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். தற்போது கண்ணன் இயக்கத்தில் தள்ளி போகாதே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். கிருத்தி ஆட்டமுடன் மற்றொரு படத்திலும் அதர்வா நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











