இன்னும் எத்தனை பேரும்மா கிளம்பியிருக்கீங்க: நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்
Recommended Video

சென்னை: நான் முதலில் விஜய் ரசிகை அதன் பிறகே நடிகை என்று தெரிவித்துள்ளார் அதுல்யா ரவி.
காதல் கண் கட்டுதே படம் மூலம் நடிகையானவர் கோவையை சேர்ந்த அதுல்யா ரவி. துரை இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஏமாளி படம் இன்று ரிலீஸாகியுள்ளது.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ரசிகர்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

அதுல்யா
நான் முதலில் விஜய் ரசிகை, அதன் பிறகே நடிகை. அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்று அதுல்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வழக்கம்
சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் எல்லாம் நான் விஜய் ரசிகை, அஜீத் ரசிகை அவர்களுடன் சேர்ந்து நடிக்க காத்திருக்கிறேன் என்று தெரிவிப்பது வழக்கமாகிவிட்டது.

விமர்சனம்
நடிக்க வந்த உடனே தல, தளபதி படங்களில் வாய்ப்பை எதிர்பார்த்து நான் அவரின் தீவிர ரசிகை என்று பிட்டை போட்டுடுவீங்களே என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

சிக்கினார்
இப்படித் தான் முன்னணி நடிகை ஒருவர் சீனியர் ஹீரோவின் தீவிர ரசிகை என்று அடிக்கடி கூறி வந்தார். இந்நிலையில் அண்ணன் நடிகர் படத்தில் நடித்தபோதோ அவரின் தீவிர ரசிகை என்று பிளேட்டை மாற்றிவிட்டார்.


Click it and Unblock the Notifications











