Don't Miss!
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு அடம்பிடிப்பதை விட்டுட்டாரா அட்லீ?
சென்னை: 3 ஹீரோக்களை வைத்து படம் இயக்க உள்ளாராம் அட்லீ.
ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லீ. அந்த படத்தை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்தார். தெறி ஹிட்டான பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து மெர்சல் படத்தை இயக்கினார் அட்லீ.
படம் எடுத்தால் தல, தளபதியை வைத்து தான் என்று அடம்பிடித்தார் அட்லீ என்று கோலிவுட்டில் பேச்சாக கிடந்தது.
அடுத்த படம்
மெர்சலை அடுத்து புதிய படம் எடுக்க தயாராகி வருகிறாராம் அட்லீ. 3 ஹீரோக்களை வைத்து படம் எடுக்கப் போகிறார் அட்லீ என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பட்ஜெட்
ஒரு ஹீரோவை வைத்து மெர்சல் படம் எடுத்தபோதே அட்லீ பட்ஜெட்டை எகிற வைத்துவிட்டார். அட்லீயால் தயாரிப்பாளரின் பாடு பாவம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 3 ஹீரோக்கள் படமாம்.
விஜய்
தல, தளபதி நிச்சயம் இந்த படத்தில் சேர்ந்து நடிக்க மாட்டார்கள். ஒரு வேளை சென்டிமென்ட்டுக்காக விஜய்யை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்வாரோ அட்லீ என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோபம்
மெர்சல் படத்தில் தளபதி சொல்லியும் கேட்காமல் அட்லீ வைத்த சில வசனங்களால் பாஜக கொந்தளித்து இலவச விளம்பரம் கொடுத்தது. இலவச விளம்பரம் கிடைத்தபோதிலும் தளபதி அட்லீ மீது கடுப்பில் உள்ளார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.