Don't Miss!
- News "பாம் வச்சிருக்கோம்! சீக்கிரம் வெடிக்க போகுது!" சென்னை வி.ஆர்.மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அட்லீயின் அடுத்த படம் தெலுங்கு இல்லை தமிழ் தானாம்: அப்போ ஹீரோ அவரா?
Recommended Video
சென்னை: மெர்சல் படத்தை அடுத்து அட்லீ தெலுங்கு படத்தை இயக்க உள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லீ. அந்த ஹிட் படத்தை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை கொடுத்தார். தெறி ஹிட்டான பிறகு மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து மெர்சல் படத்தை எடுத்தார்.
மெர்சல் படம் சூப்பர் ஹிட் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி
தெறி படத்தை அடுத்து இயக்கினால் தல அல்லது தளபதியை தான் இயக்குவேன் என்று அடம் பிடித்தார் அட்லீ. பிடிவாதமாக இருந்து மீண்டும் விஜய்யை வைத்து படம் எடுத்தார்.
தெலுங்கு
3வது முறையாக விஜய்யை இயக்கும் ஆசை உள்ளதாக அட்லீ தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் தெலுங்கு படம் ஒன்றை இயக்கிவிட்டு வந்து விஜய்யுடன் பணியாற்றுவார் என்று கூறப்பட்டது.
ஸ்கிரிப்ட்
தெலுங்கு படம் இயக்கும் எண்ணம் உள்ளது. ஆனால் அது தற்போது அல்ல. என் அடுத்த படம் தெலுங்கில் இல்லை தமிழில் தான். அந்த பட ஸ்கிரிப்ட் வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்று அட்லீ தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு
அட்லீயின் நான்காவது படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. யார் கண்டால் அந்த ஹீரோ விஜய்யாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.