Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மும்முரமாகத் தொடங்கிய அட்லீ - ஷாருக்கான் படத்தின் முதற்கட்ட பணிகள்!
சென்னை: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அட்லீ.
ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகர் விஜய்யுடன் தொடர்ந்து 3 படங்கள் பணியாற்றினார் அட்லீ.
மனநலத்தை காக்கும் அகஸ்து பவுண்டேஷன்... அமீர்கான் மகளின் புதிய முயற்சி!
தற்போது அட்லீ பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் சாதனை
ராஜா ராணி படத்தில் இயக்குனராக அறிமுகமான அட்லீ முதல் படத்திலேயே வெற்றியை பெற்றார். பின்னர் விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார். விஜயுடன் அட்லீ இணைந்த படங்கள் அனைத்தும் கமர்ஷியல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனை செய்துள்ளது.
வியக்க வைத்தார்
வெறும் 4 படங்கள் மட்டும் இயக்கி கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்து விட்டார் அட்லீ. இதன் விளைவாக ஷாருக்கான் உடன் பணியாற்றும் வாய்ப்பை பெற்று பலரையும் வியக்க வைத்தார் அட்லீ.
உறுதி ஆகியுள்ளது
ஆனால் பல மாதங்கள் ஆகியும் அட்லீ - ஷாருக்கான் இணையும் படம் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்ததால் படம் கைவிடப்பட்டது என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அட்லீ - ஷாருக்கான் காம்போ உறுதியாகியுள்ளது.
வருட இறுதியில்
பெரிய பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால் இந்த வருடத்தின் இறுதியில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.