Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
ஆலமரம் சரிந்தது... அட்லி உருக்கமான ட்விட்டர் பதிவு !
சென்னை : இயக்குனர் அட்லியின் பெரியப்பா இறந்துவிட்டாக ட்விட்டர் பக்கத்தில் தனது சோகத்தை பதிவிட்டுள்ளார்.
ராஜா ராணி, தெறி,மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார்.
ஆஸ்கார் கலாச்சாரத்தை மாற்றிய கொரோனா...என்னென்ன விஷயங்கள் மாறின ?
தளபதியை வைத்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து தன்னை ஒரு சிறந்த இயக்குனராக நிலை நிறுத்திக் கொண்டார் அட்லி.
ராஜாராணி வெற்றி
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றிய அட்லீ, ஆர்யா, ஜெய், நயன்தாரா , நஸ்ரியாவை வைத்து ராஜாராணி என்ற படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது முன்னணி இயக்குநராக வலம் வருகிறார். இயக்குநர் மட்டுமின்றி அந்தகாரம் உள்ளிட்ட ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார்.
ஷாருக்கானை வைத்து
பிகில் பட வெற்றிக்குப் பின் ஷாருக்கானை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை இருவரும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தனது பெரியப்பா மறைந்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் அட்லீ.
ஆலமரம் சரிந்தது
தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், என் பெரியப்பா நீதிபதி சவுந்தர பாண்டியன் காலமானார். எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது. எப்படி எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். பெரியப்பா நீங்கள் எப்போதும் எங்கள் அரசர், எங்களின் முன் மாதிரி. உங்களை ரொம்பவே மிஸ் பண்றோம். நிம்மதியாக ஓய்வெடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
திரைத்துறையினர் ஆறுதல்
சோகத்தில் ஆழ்ந்திருக்கும் இயக்குநர் அட்லீக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினர் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வரும் நிலையில் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த காலகட்டத்தில் அட்லீயின் வீட்டில் நிகழ்ந்திருக்கும் சோகம் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.