பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் திடீர் மரணம்.. பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர், சஞ்சய் கபூர் காலமானார். அவருக்கு வயது 53. குதிரை சவாரி செய்து கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல இந்திய தொழிலதிபரும் பாலிவுட் நடிகையின் முன்னாள் கணவருமான சஞ்சய் கபூர், இங்கிலாந்தில் 53 வயதில் காலமானார். விளையாட்டுப்பிரியரான இவர் போலா விளையாடிக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலன் அளிக்காமல் சஞ்சய் உயிரிழந்தார். அவர் குதிரை சவாரி செய்து கொண்டிருந்த போது, தேனீ ஒன்று அவரது வாயில் நுழைந்து மாரடைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

திடீர் மரணம்: தொழிலதிபரான சஞ்சய், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரை மணந்தார், அவருக்கு மகள் சமைரா மற்றும் மகன் கியான் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், 2016 ஆண்டு பிரிந்தனர். சஞ்சய், நடிகை கரிஷ்மா திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, ஆடை வடிவமைப்பாளர் நந்திதா மஹ்தானியை மணந்தார். அதற்கு பின் பிரியா சச்தேவை மணந்தார், அவர் அமெரிக்க ஹோட்டல் அதிபர் விக்ரமின் முன்னாள் மனைவியாவார். அவரது திடீர் மறைவு நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் திரைப்பிரங்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











