Don't Miss!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Automobiles எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- Finance லண்டனில் டும் டும் டும்? லொகேஷன்-ஐ மாற்றிய ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்..!!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் 'வாராயோ வெண்ணிலாவே'!
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 'நினைத்தது யாரோ' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கும் அபிஷேக் பிலிம்ஸ் பட நிறுவன தயாரிப்பாளர்கள் பி. ரமேஷ், இமானுவேல் இருவரும் அதிக பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதாநாயகிகளாக ஹரிப்ரியா, காவ்யா ஷெட்டி இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தம்பி ராமய்யா, முருகதாஸ் உள்பட பலரும் நடிக்கின்றனர்.
ராணா ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ஆர் சசிதரன் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கி வெற்றி பெற்ற 'சென்னை - 28' படத்தின் திரைக்கதை எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றியவர்.
சசிதரனிடம் படம் பற்றிக் கேட்டோம்...
"பணக்கார இளைஞராக வரும் தினேஷ் சென்னையிலிருந்து கேரளாவுக்கு வேலை செய்ய செல்கிறார். சென்ற இடத்தில் அழகான பெண்ணை சந்திக்கிறார். காதல் வயப்படுகிறார். காதலின் விளைவு, எதிர்பாராத திடீர் திருப்பங்களுடன் கதை முடிகிறது. படத்தின் பெரும்பகுதி காட்சிகள் கேரளாவில் படமாக்கப்பட்டுள்ளன,' என்றார்.
படத்தைப் பற்றி நடிகர் தினேஷ் என்ன சொல்கிறார்?
"அட்டகத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு சிறப்பான கதைக்களம் என்பதால் இதுவும் எனக்கு நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையுடன் நடிக்க ஒத்துக் கொண்டேன், என்கிறார்.