Don't Miss!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஓரேயோரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அடித்து, மாடியில் இருந்து தள்ளி கொல்லப் பார்த்தேனா?: பார்த்திபன் விளக்கம்
சென்னை: தன் மீது காவல் நிலையத்தில் கொலை முயற்சி புகார் அளிக்கப்பட்டுள்ளது குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார் பார்த்திபன்.
இயக்குநரும், நடிகருமான பார்த்திபனின் வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்த ஜெயங்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் அளித்தார்.
திருவான்மியூர் வீட்டில் கொள்ளை நடந்த பிறகு ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணத்தை கேட்க சென்ற இடத்தில் பார்த்திபன் தன்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளி கொலை செய்யப் பார்த்ததாக அவர் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இது குறித்து பார்த்திபன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவுவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர்.
— R.Parthiban (@rparthiepan) May 9, 2019
மகிழ்ச்சி!
'பார்த்திபன் கொலை செய்ய முயற்சி' Humour sense-க்கு அளவே இல்லாமல் போய் விட்டது!என் புகாரின் பெயரில் நேற்று மாலை ஆணையர் அலுவலகத்தில் நின்ற குற்றவாளி இன்று காலை அதே அலுவலகத்தில் என்மீது புகார் செய்ய அது எல்லா ஊடகங்களிலும் வர கவிஞனாக பிரபலமாகி விட்டார் ஒருவர். மகிழ்ச்சி! என்று தெரிவித்துள்ளார்.
தன் மீது புகார் அளித்தவர் பற்றியும் காமெடியாக ட்வீட் செய்துள்ளார் பார்த்திபன்.