Don't Miss!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- News நாடு முழுக்க மாறுகிறது சம்பளம்.. வருகிறது புதிய ஊதிய திட்டம்.. பணியாளர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
பாடல் உரிமை.. நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆவணங்களை தாக்கல் செய்த இளையராஜா!
சென்னை: தான் இசையமைத்த படப் பாடல்களின் உரிமையை முறைகேடாக ஆடியோ நிறுவனங்கள் பயன்படுத்துவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ள இளையராஜா, தனது பாடல் உரிமைக்கான ஆவணங்களை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதுகுறித்து இளையராஜா தொடர்ந்த வழக்கில், ‘நான் இசையமைத்த திரைப்பட பாடல்கள், பக்தி பாடல்கள் மீதான உரிமம் என்னிடம் உள்ளது.
ஆனால், இந்த பாடல்களை எந்த அனுமதியும் இல்லாமல் எக்கோ ரிக்கார்டிங் கம்பெனி, யுனிசிஸ் இன்போ சொல்யூசன் நிறுவனம், மலேசியாவை சேர்ந்த அகி மியூசிக் நிறுவனம், மும்பையை சேர்ந்த கிரி டிரேடிங் கம்பெனி விற்பனை செய்து வருகின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா, இளையராஜாவின் பாடல்களை ஒலிப்பரப்பவும், கேசட்டில் விற்பனை செய்யவும் அகி உள்பட 5 நிறுவனங்களுக்கு நிரந்த தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து 5 நிறுவனங்களும் மேல்முறையீடு செய்தன.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர், ‘இந்த வழக்கில் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தங்களுக்குள் உள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள மறுக்கின்றனர். இருதரப்பினரும் தங்களிடம் உள்ள ஆதாரங்களையும் தாக்கல் செய்யவேண்டும். இந்த ஆதாரங்களை பதிவு செய்ய ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி பி.கோகுல்தாசை, சட்ட ஆணையராக நியமிக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.
இதன்படி, உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மைய கட்டிடத்தில் வைத்து நீதிபதி கோகுல்தாஸ் நேற்று விசாரணையை தொடங்கினார்.
இளையராஜா நேரில் ஆஜராகி, தன் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்தார். அதேபோல ஆடியோ நிறுவனங்களும் ஆவணங்களை தாக்கல் செய்தன.
இவற்றை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அடுத்த விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.