Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
விஸ்வரூபம் 2-க்கு தடைகோரிய வழக்கு.. கமலுக்கு விளக்கம் அளிக்க உத்தரவு.. ஆக. 6ம் தேதிக்குள்!
விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கில் விளக்கமளிக்க ஆகஸ்ட் 6 வரை கமலுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: விஸ்வரூபம் 2 திரைப்படத்திற்கு தடைகோரிய வழக்கில் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கமல்ஹாசனுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹசன் தயாரித்து இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் 2 திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் புரமோஷன் மற்றும் ரிலீஸ் வேலையில் தீவிரமாக கமல் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில், மர்மயோகி திரைப்படத்தை பிரமிட் சாய்மிராவுடன் இணைந்து தயாரிப்பதாக போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, கமல் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.5.44 கோடியை திருப்பி செலுத்தாமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டுமென கமல்ஹாசன் மற்றும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு காலக்கெடு விதித்துள்ளது.
மர்ம யோகி திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளுக்காகப் பெற்ற ரூ. 6.90 கோடியை கமல்ஹாசன் திருப்பி செலுத்தவில்லை என ஏற்கனவே ஒரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இப்போது இரண்டாவது வழக்கு பிரமிட் சாய்மிரா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.