Don't Miss!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- News "உயிரை பறித்த விபரீத விளையாட்டு.." ஆசனவாயில் அதிவேக காற்று.. குடல் வெடித்து பெங்களூர் இளைஞர் மரணம்!
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அந்த நடிகைக்கு ஐஸ்வர்யா ராய்னு நினைப்பு: ஹீரோ விளாசல்
பெங்களூர்: தயாரிப்பாளர் மீது எந்த தவறும் இல்லை, நடிகை அவந்திகா ஷெட்டி தான் ஐஸ்வர்யா ராய் என்ற நினைப்பில் ஓவராக செய்கிறார் என்று கன்னட நடிகர் குருநந்தன் தெரிவித்துள்ளார்.
ராஜா கன்னடா மீடியம் படத்தின் ஹீரோயினான அவந்திகா ஷெட்டி தயாரிப்பாளர் சுரேஷ் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தனக்கு சம்பள பாக்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் படத்தின் ஹீரோ குருநந்தன் இது குறித்து கூறியிருப்பதாவது,
தயாரிப்பாளர்
சினிமா துறையில் உள்ள சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் சுரேஷ். ஜென்டில்மேன். அவர் படக்குழுவை தனது குடும்பத்தார் போன்று பார்த்துக் கொள்கிறார். அவந்திகா மீது தான் தப்பு உள்ளது.
அவந்திகா
எங்கள் தயாரிப்பாளர் மிகவும் அமைதியானவர். படப்பிடிப்பு துவங்கியபோது ஒழுங்காக இருந்த அவந்திகா நாட்கள் செல்லச் செல்ல ஓவர் அலப்பரை செய்ய ஆரம்பித்தார்.
சுரேஷ்
அவந்திகாவின் தொல்லையை தாங்க முடியாமல் தான் அவரை படத்தில் இருந்து நீக்க முடிவு செய்தார் தயாரிப்பாளர். ரூ. 40 லட்சம் வரை படத்திற்காக செலவு செய்த நிலையில் அவந்திகாவை நீக்கினால் பணக் கஷ்டம் ஏற்படும் என்று படக்குழு தயாரிப்பாளரிடம் கூறியது.
ஷூட்டிங்
அவந்திகா ஷூட்டிங்கிற்கு சரியாக வர மாட்டார். தான் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு அவருக்கு. ஒரு முறை மும்பை சென்று 20 நாட்கள் அங்கேயே இருந்துவிட்டார். அவரால் ஷூட்டிங்கில் குழப்பம்.
வெளிநாடு
வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்த வேண்டியிருந்தது. ஆனால் அவந்திகா வரவில்லை. அவர் இல்லாமல் ஷூட்டிங் நடத்தினோம். அவரின் ஹோட்டல் பில்லுக்கே தயாரிப்பாளர் அதிகம் செலவு செய்துள்ளார். காலை 10.30 மணிக்கு மேல் தான் ஹோட்டலில் இருந்தே கிளம்புவார்.
பேச்சு இல்லை
அவந்திகா படக்குழுவினரிடம் பேச மாட்டார். அவருக்கு தான் ஒரு ஐஸ்வர்யா ராய் என நினைப்பு. ஐஸ்வர்யா ராய் கூட இப்படி எல்லாம் சீன் போட மாட்டார் என்கிறார் குருநந்தன்.