Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
"அவருடே ராவுகள்"... ப்ரிவியூ பார்த்து தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளரின் காதலியும் தற்கொலை!
கொல்லம்: தற்கொலை செய்து கொண்ட "அவருடே ராவுகள்" படத்தின் தயாரிப்பாளரின் காதலியும் தற்போது தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கொல்லம் மனையில் குளங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் அஜய் கிருஷ்ணன் (28). இவர் மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த மெம்மரீஸ், ‘சீன் 1 நம்முடைய வீடு' உள்பட சில மலையாள படங்களிலும், டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர், பிரபல நடிகர் ஆஸிப் அலியை கதாநாயகனாக வைத்து ‘அவருடே ராவுகள்' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து வந்தார். அஜய் தயாரித்த முதல் படம் இதுவாகும். இந்த படத்தில் ஆசிப் அலி, உன்னி முகுந்தன், வர்கீஸ், வினய், ஹனி ரோஸ், லீனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தற்கொலை...
இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டன. அடுத்தமாதம் படத்தை வெளியிட அஜய் கிருஷ்ணன் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 23ம்தேதி இரவு, எர்ணாகுளத்தில் இருந்து கொல்லத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அஜய், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
படம் திருப்தியில்லை...
இவர் தற்கொலைக்குக் காரணம் இவர் தயாரித்த படம்தான் என்று கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன் தன்னுடைய ‘அவருடே ராவுகள்' படத்தின் பிரிவியூ ஷோவைப் பார்த்த அஜய்க்கு, அது திருப்தியளிக்கவில்லை. ரூ.4 கோடி செலவு செய்து தான் தயாரித்த படம் வர்த்தக ரீதியாக வெற்றி அடையாதோ என்று அச்சமடைந்த அஜய், இரண்டு நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்ததாகவும், பின்னர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.
அதிர்ச்சி...
இந்த சம்பவம் மலையாளத் திரையுலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தான் தயாரித்த படம் வெற்றி பெறாது என்று தயாரிப்பாளரே தற்கொலை செய்துக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
காதலியும் தற்கொலை...
இந்நிலையில், காதலனின் திடீர் மரணத்தால் அதிர்ச்சியுற்ற அஜயின் காதலி, வினிதா நாயரும் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பெங்களூருவில் பேஷன் டிசைனிங் படித்தவர்.
கடைசிக் கடிதம்...
அஜயின் திடீர் தற்கொலையால் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதனால் இந்த முடிவை தான் எடுத்ததாகவும் வினிதா தனது கடைசிக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. அஜயைப் போலவே வினிதாவும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.