Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான்: ஏவிஎம் சரவணன் புகழாரம்
சென்னை: உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான் என தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதா நேற்று இரவு காலமானார்.
ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட அவரின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் ஜெயலலிதா குறித்து தயாரிப்பாளர் ஏ.வி.எம். சரவணன் கூறுகையில்,
தமிழகத்தில் மறக்க முடியாத பெயர் ஜெயலலிதா. நடிகையாக ஆரம்பித்து அதன் பிறகு அரசியலுக்கு வந்தவர். படத்தில் நடிக்கும்போதே அரசியல் தொடர்பான புத்தகங்கள் படிப்பது, அரட்டை அடிக்காமல் இருப்பது என தொழிலில் கவனம் செலுத்தியவர்.
இது மாதிரியான பெண்மணியை மீண்டும் பார்ப்பது கடினம். ஜான்சி ராணி போல இந்திரா காந்தி போல ஜெயலலிதா. இவர் போன்ற ஒரு பெண்மணி இனிமேல் வருவது கடினம்.
அவருக்கு சமமானவரை சொல்ல முடியாது. உழைப்பு நேர்மை என்றால் ஜெயலலிதா தான். நல்ல திறமைசாலியான பெண். தமிழகத்திற்குப் பெரிய இழப்பு என்றார்.