அதிக சம்பளம் கேட்கிறார்கள்.. சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வெடுக்கும் பிரபல தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதால் சினிமா தயாரிப்பதில் இருந்து சில காலம் விலகியிருக்க போவதாக பிரபல தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமா தொடர்பான அப்டேட்டுகளை டாப் 5 பீட்ஸில் வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில், ஏராளமான படங்களை தயாரித்துள்ள ஏவிஎம் சரவணன், நடிகர்கள் அதிக சம்பளம் கேட்பதால் அதற்கு தன்னை தயார் படுத்திக்கொள்வதற்காக சற்று விலகி இருக்கபோவதாக அறிவித்துள்ளதை கூறியிருக்கிறார்.

மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டதன் காரணத்தையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் மண்டேலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் அதில் யோகி பாபுவின் கேரக்டர் குறித்த தகவலையும் கூறியுள்ளார்.
மேலும் ரம்ஜான் நாளில் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் சுந்தர் சியின் அரண்மனை 3 படங்கள் ரிலீஸ் ஆவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் ராமாயணத்தை தழுவி பிரபாஸ் நடிப்பில் 500 கோடி ரூபாய் செலவில் உருவாகும் ஆதிபுருஷ் படம் மற்றும் கோடிகளில் உருவாகும் அவரது மற்ற படங்கள் குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











