Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் விருப்பம் - யுவன் ஷங்கர் ராஜா
சென்னை: சகிப்பின்மை விவகாரத்தில் விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியிருக்கிறார்.
சகிப்பின்மை மற்றும் அது தொடர்பான தொடர்பான விவகாரங்கள் நாளுக்குநாள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான போராட்டங்களும் நாட்டில் அதிகரித்துக் கொண்டுள்ளன.
சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்த விவகாரத்தில் தங்களை கருத்துக்களை வெளியிட அது பெரிய பிரச்சினையாக மாறி மிகப்பெரிய வாதங்களுக்கு வழிவகுத்தது.
இந்நிலையில் சகிப்புத்தன்மை விவகாரத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.
"சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை மேலும் அதுபோன்ற நிலைமை இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.
அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை" என்று யுவன் தெரிவித்து இருக்கிறார்.
வாய்ஸ் ஆப் யுவன் என்ற பெயரில் யுவன் நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சியானது துபாய், மலேசியா உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவிருக்கிறது.
இதில் இளையராஜா உட்பட பல்வேறு முன்னணி இயக்குனர்கள், பாடகர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.