Just In
- 14 min ago
தோத்துட்டேன் மச்சான்.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு போனில் உரையாடிய சோமசேகர்.. வைரலாகும் வீடியோ!
- 26 min ago
பேண்டை கழட்டி 'அதை' காட்டினார்.. பிரபல இயக்குநர் மீது யுனிவர்சிட்டி பட நடிகை பகீர் புகார்!
- 1 hr ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 2 hrs ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க வரலாற்றிலேயே... வயதான அதிபர்... விசித்திர சாதனையைப் படைக்கும் ஜோ பைடன்
- Lifestyle
இந்த டீ நீங்க தூங்கும்போதுகூட உங்க கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுமாம்...!
- Sports
டெஸ்ட் தரவரிசை.... 4வது இடத்துக்கு இறங்கிய கேப்டன்... முதல் 50 இடங்களில் 8 இந்திய வீரர்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Automobiles
வால்வோ எஸ்60 சொகுசு காருக்கு ஆன்லைனில் புக்கிங் துவங்கியது... முதலில் வருவோருக்கு சகாய விலை!
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
படத்துல அந்த மாதிரி மேட்டராம்... தேசிய விருது பெற்ற ஹீரோ படத்துக்கு தடை விதித்தது துபாய்!
மும்பை: தேசிய விருது பெற்ற நடிகரின் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது.
இந்தியில், விக்கி டோனர், துமாரி சுலு, அந்தாதுன், பதாய் ஹோ, ஆர்டிகிள் 15 உட்பட பல ஹிட் படங்களில் நடித்திருப்பவர் அயுஷ்மன் குரானா.
அந்தாதுன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் அயுஷ்மன் குரானா. இவர் இப்போது நடித்துள்ள படம், 'சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான்' (Shubh Mangal Zyada Saavdhan).
பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில்.. குட்டி ஸ்டோரி பாட்டுக்கு செம டான்ஸ்.. வைரலாகும் வீடியோ!

முத்தக்காட்சி
இதில் ஜிதேந்திர குமார், கஜ்ராஜ் ரவ், நீனா குப்தா, மனுரிஷி சத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதை. இவர்களை பற்றி பேசும் முதல் இந்தி படம் இது என்று கூறப்படுகிறது. இதன் டிரைலரில் அயுஷ்மன் குரானாவும் ஜிதேந்திர குமாரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது.

படத்துக்குத் தடை
இந்தக் காட்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தி படங்களுக்கு வரவேற்பு உள்ளது. எந்த இந்தி படம் ரிலீஸ் ஆனாலும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால், ஆயுஷ்மன் குரானா நடித்துள்ள இந்தப் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது.

நீக்கி விடுகிறோம்
இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதை என்பதால் அனுமதிக்க முடியாது. படத்துக்கு தடை விதிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்கள், அந்நாட்டுத் தணிக்கைத் துறையிடம், அயுஷ்மன் குரானா மற்றும் ஜிதேந்திர குமாரின் முத்தக் காட்சிகளை நீக்கி விடுகிறோம். பிறகு ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியுமா? என்று கோரிக்கை வைத்தனர்.

அனுமதிக்க முடியாது
ஆனால், இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய படம் என்பதால் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் இந்த படம் அந்த நாடுகளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன், இது எனக்கு முக்கியமான படம். இப்படியொரு படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று நடிகர் அயுஷ்மன் குரானா கூறியிருந்தார்.