Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
படத்துல அந்த மாதிரி மேட்டராம்... தேசிய விருது பெற்ற ஹீரோ படத்துக்கு தடை விதித்தது துபாய்!
Recommended Video
மும்பை: தேசிய விருது பெற்ற நடிகரின் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது.
இந்தியில், விக்கி டோனர், துமாரி சுலு, அந்தாதுன், பதாய் ஹோ, ஆர்டிகிள் 15 உட்பட பல ஹிட் படங்களில் நடித்திருப்பவர் அயுஷ்மன் குரானா.
அந்தாதுன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் அயுஷ்மன் குரானா. இவர் இப்போது நடித்துள்ள படம், 'சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான்' (Shubh Mangal Zyada Saavdhan).
பிலிப்பைன்ஸ் விமான நிலையத்தில்.. குட்டி ஸ்டோரி பாட்டுக்கு செம டான்ஸ்.. வைரலாகும் வீடியோ!
முத்தக்காட்சி
இதில் ஜிதேந்திர குமார், கஜ்ராஜ் ரவ், நீனா குப்தா, மனுரிஷி சத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதை. இவர்களை பற்றி பேசும் முதல் இந்தி படம் இது என்று கூறப்படுகிறது. இதன் டிரைலரில் அயுஷ்மன் குரானாவும் ஜிதேந்திர குமாரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது.
படத்துக்குத் தடை
இந்தக் காட்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தி படங்களுக்கு வரவேற்பு உள்ளது. எந்த இந்தி படம் ரிலீஸ் ஆனாலும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால், ஆயுஷ்மன் குரானா நடித்துள்ள இந்தப் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது.
நீக்கி விடுகிறோம்
இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதை என்பதால் அனுமதிக்க முடியாது. படத்துக்கு தடை விதிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்கள், அந்நாட்டுத் தணிக்கைத் துறையிடம், அயுஷ்மன் குரானா மற்றும் ஜிதேந்திர குமாரின் முத்தக் காட்சிகளை நீக்கி விடுகிறோம். பிறகு ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியுமா? என்று கோரிக்கை வைத்தனர்.
அனுமதிக்க முடியாது
ஆனால், இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய படம் என்பதால் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் இந்த படம் அந்த நாடுகளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன், இது எனக்கு முக்கியமான படம். இப்படியொரு படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று நடிகர் அயுஷ்மன் குரானா கூறியிருந்தார்.