Don't Miss!
- News அப்படி போடு.. ஓட்டு போட நாளை வரிசையில நிக்க வேண்டாம்.. EC அறிமுகம் செய்த செம வசதி.. என்னன்னு பாருங்க
- Finance தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Technology கடைசி நேர டிவிஸ்டு.. வாக்குச் சாவடியில் இந்த 11 ஆவணங்களில் எதை காட்டினாலும்.. ஒட்டு போடலாம்!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க இதயம் பாதுகாப்பாக இருக்கணுமா? அப்ப இந்த 5 விஷயங்களை ஒழுங்கா பண்ணுங்க...!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாகுபலி 2: கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்கு மட்டும் 10 வாரங்களை ஒதுக்கிய ராஜமௌலி!
ஹைதராபாத்: பாகுபலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 10 வாரங்களை படக்குழு ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் பாகுபலி. தற்போது இப்படத்தின் 2 வது பாகத்தினை ராஜமௌலி இயக்கி வருகிறார்.
முதல் பாகத்தை ராஜமௌலி ட்விஸ்ட்டுடன் முடித்திருந்ததால் 2 வது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை வருகின்ற 13ம் முதல் எடுக்கவிருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்துள்ளோம்.
பாகுபலி 2 கிளைமாக்ஸ் பகுதிக்கு 10 வாரங்களை ஒதுக்கியுள்ளோம். உண்மையில் இது சவாலானது தான்.ஜூன் 13ம் தேதி பாகுபலி 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்கவுள்ளோம்'' என்று கூறியிருக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜமௌலி பிலிம் சிட்டியில் படம்பிடிக்கப்படவுள்ளன. சாபு சிரில் மேற்பார்வையில் இதற்கான பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ராணா ஆகியோர் படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் பங்கு பெறுகின்றனர்.இதற்காக அனைவரின் கால்ஷீட்களையும் ராஜமௌலி மொத்தமாக வாங்கியிருக்கிறாராம்.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான விடைகள் இந்தப் பாகத்தில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அபரிமிதமாக உள்ளது.