Don't Miss!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Automobiles இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
கூல் பாகுபலி, அழகு தேவசேனா, கம்பீர ராஜமாதா, படுபாவி பல்லா: ஃபீல் பண்ண பிரபாஸ்
ஹைதராபாத்: பாகுபலி 2 படம் ரிலீஸாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பிரபாஸ் ஃபீல் பண்ணி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 உலக அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
அந்த படம் ரிலீஸாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
ஃபேஸ்புக்
படம் ரிலீஸாகி ஓராண்டு நிறைவடைந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் பிரபாஸ். மேலும் ராஜமவுலி மற்றும் மொத்த படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமரேந்திர பாகுபலி
மகேந்திர பாகுபலியை விட அவரின் தந்தையான அமரேந்திர பாகுபலி தான் பலரின் மனதையும் கொள்ளையடித்தார் என்று கூற வேண்டும். அமரேந்திர பாகுபலி ஸ்கிரீனில் வந்தாலே ஒரு இனம் தெரியாத மரியாதையும், பாசமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. அவர் தேவசேனா முன்பு முட்டாள் போன்று நடித்த காட்சிகளை யாராலும் மறக்கவே முடியாது. ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்த காட்சிகள் அவை.
ராஜமாதா
குந்தலதேச இளவரசியாகவும் சரி, மகிழ்மதி மருமகளாகவும் சரி தேவசேனா தனது நடிப்பால் அசத்தினார். ராஜமாதாவின் நடிப்பை சொல்லவே வேண்டாம். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருந்தார் ராஜமாதா.
பல்லா
அடப்பாவி கட்டப்பா இப்படி பாகுபலியை கொன்றுவிட்டாயே என்று ரசிகர்கள் அதிகம் ஃபீல் செய்தார்கள். பல்வாள் தேவன் வில்லத்தனத்தில் அசத்தி விட்டார். பல்வாள் தேவன் ஸ்கிரீனில் வந்தாலே ராணா வில்லனாக நடித்துள்ளார் என்பதை மக்கள் மறந்து அவரை சபித்தனர். பல்வாள் தேவனின் தந்தையாக நடித்த நாசர் பிஜ்ஜால தேவனாகவே வாழ்ந்துவிட்டார்.
தனி ரகம்
பாகுபலி படத்தில் நடித்தவர்கள் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள் என்றால், கீரவாணியின் இசை அது வேறு ரகம். ஒவ்வொரு பாடலும் ரசிக்கும்படி இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் இருந்தது இசை என்றால் அது மிகையாகாது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும் அருமையோ அருமை.
ஏன்?
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இரண்டு ஆண்டு காத்திருந்தனர். படம் துவங்கிய சில நிமிடத்திலேயே அதற்கான பதில் கிடைத்துவிட்டது.