twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    #Baahubali2 ஏன், ஏன்னு நாம் 2 வருஷமாக கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த நாள் இன்று

    By Siva
    |

    ஹைதராபாத்: பாகுபலி 2 படம் ரிலீஸாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது.

    எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸானது.

    கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தனர். பாகுபலி 2 ரிலீஸாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது.

    காதல் முறிவு குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த ஸ்ருதி ஹாஸன்காதல் முறிவு குறித்து முதல்முறையாக ட்வீட் செய்த ஸ்ருதி ஹாஸன்

    ராணா

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் என் வாழ்க்கையும், இந்திய சினிமாவும் மாறிவிட்டது என்று ட்வீட் செய்துள்ளார் ராணா.

    பிரபாஸ்

    பிரபாஸ்

    பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக நான் 5 ஆண்டுகளை ஒதுக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் தெலுங்கு சினிமா மீது வைத்திருந்த எண்ணத்தை மாற்றியது பாகுபலி என்கிறார் பிரபாஸ்.

    கொண்டாட்டம்

    பாகுபலி 2 ரிலீஸாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹாரின் தர்மா புரொடக்ஷன்ஸ் கொண்டாடுகிறது. பாகுபலி 2 படத்தை கரண் ஜோஹார் தான் இந்தியில் ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நன்றி

    தெலுங்கு திரையுலகிற்கு பெருமை தேடித் தந்த ராஜமவுலிக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

    English summary
    Prabhas, Rana are feeling proud and nostalgic as Baahubali 2 completes 2 years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X