Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழகத்தில் 'பாகுபலி 2' காலை காட்சிகள் ரத்து: ரசிகர்கள் அதிருப்தி
சென்னை: தமிழகத்தில் பாகுபலி 2 காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரபாஸ், அனுஷ்காவை வைத்து ராஜமவுலி இயக்கியுள்ள பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. தமிழகத்தில் ப்ரீமியர் ஷோக்களுக்கு ஏற்பாடு செய்யாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில் பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பு தமிழகத்தில் காலையில் ரிலீஸாகும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதிருப்தியே மிச்சம். காலை 5 மணி மற்றும் 8 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
காலை 11 மணிக்கு தான் பாகுபலி 2 தமிழகத்தில் ரிலீஸாக உள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஹைதராபாத், மங்களூரு, பெங்களூரு ஆகிய நகரங்களில் பாகுபலி தமிழ் பதிப்பு ஸ்பெஷல் ஷோக்கள் நேற்று நடந்தன.
தயாரிப்பாளருக்கும், தமிழக வினியோகஸ்தருக்கும் இடையேயான பிரச்சனையால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.