Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விரைவில் சீனத் திரைகளை ஆக்கிரமிக்கும் பாகுபலி 2!
இந்தியப் படங்களுக்கான சர்வதேச சந்தை கிட்டத்தட்ட ஹாலிவுட் படங்களுக்கு நிகராக மாறிவிட்டது.
இந்தியப் படங்கள் சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட்டைப் பிடித்தது என்றால் அது ரஜினிகாந்தின் சிவாஜி படத்துக்குப் பிறகுதான் எனலாம். அதன் பிறகு தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் இந்திப் படங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசிய கண்ட நாடுகளில் அமோக வரவேற்பு.
சில ஆப்ரிக்க நாடுகளிலும் இந்தப் படங்களுக்கு நல்ல வசூல். ஆமிர்கானின் டங்கல் படத்துக்கு இந்தியாவில் கிடைத்த வசூலை விட அதிகமாக வெளிநாடுகளில் கிடைத்தது. ரஜினிகாந்தின் கபாலிக்கு தமிழகத்தில் கிடைத்ததை விட ஒன்றரை மடங்கு அதிக வசூல் வெளிநாடுகளில் கிடைத்து.
குறிப்பாக டங்கல் படம் சீனாவில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி ரூ 1000 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து தன்னிகரில்லாத படமாக நிற்கிறது.
கடந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் பல சாதனைகளை நிகழ்த்திய படம் எஸ்எஸ் ராஜமௌலியின் பாகுபலி 2. இந்திய அளவில் பிரமாண்டம், வசூல் இரண்டிலும் இந்தப் படத்துக்கு நிகராக வேறு எந்தப் படத்தையும் சொல்ல முடியாது எனும் அளவுக்கு சிறப்பான படமாக அமைந்தது.
இப்போது இந்தப் படத்தை சீனா முழுவதும் வெளியிடுகின்றனர். இஸ்டார் எனும் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. பாகுபலி முதல் பாகம் சீனாவில் வெளியாகி ரூ 7.3 கோடியை வசூலித்தது. ஆனால் பாகுபலி 2 குறைந்தது ரூ 500 கோடியையாவது ஈட்டும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.