Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பாகுபலி சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் 4 மாதங்களானது! - இயக்குநர் ராஜமௌலி
ஹைதராபாத்: ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே உலக அளவில் கவனம் ஈர்க்க முடியுமா? ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே அது சாத்தியம் தென்னிந்தியப் படங்களால் அதெல்லாம் முடியாது என்ற வழக்கத்தை பாகுபலி மூலம் உடைத்துள்ளார் ராஜமவுலி.
கமர்ஷியலின் சினிமாதான் இவர்களுக்குத் தெரியும் என்று தெலுங்கு சினிமா மீது விழுந்த முத்திரையை மாற்றி, இந்த சரித்திரப் படம் மூலம் வேறொரு பரிமாணம் காட்டியிருக்கிறார்.
பாகுபலியின் எத்தனை பிரமாண்டமானது தெரியுமா? இதோ, இயக்குநர் ராஜமவுலியின் வார்த்தைகளில்...
"படிக்கும் போதே வரலாற்று கதைகளின் மேல் ஆசை அதிகம், ஆனால் இயக்குனரான உடனேயே சரித்திரக் கதைகளை எடுக்க முடியாது என்பதற்காக இத்தனை வருடங்கள் காத்திருக்க நேர்ந்தது. இப்பொழுது பாகுபலியின் மூலம் அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது. இந்தப் படத்தில் வரும் சண்டைக் காட்சிகளை படம் பிடிப்பதற்கு 4 மாதங்களை செலவிட்டுள்ளோம். 2000 பாடிபில்டர்களை வைத்து படம் பிடித்தது மறக்க முடியாத அனுபவம், படத்தின் ஹீரோ பிரபாஸ்தான் என்றாலும் அவருக்கு சரிசமமான வில்லனாக ராணாவுக்கும் படத்தில் முக்கியப் பங்குள்ளது."