Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதோ இன்னும் ஒரு காதல் கதை.. மதமும், கொள்கையும் போராடும் ... பானு!
சென்னை: தமிழ்த்திரையில் மற்றொரு காதல் கதையாக உருவாகியிருக்கும் பானு திரைப்படம் புதுமுகங்களின் உழைப்பில் உருவாகி இருக்கிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படம் முழுவதுமே காதல் மற்றும் காதலை சார்ந்தே எடுக்கப்பட்டிருக்கிறது என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
முஸ்லிம் பெண் ஒருவருக்கும் கடவுள் மறுப்புக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இளைஞனுக்கும் வருகின்ற காதலைப் பற்றி கூறும் படமே பானு. படத்தில் நாயகி தன் காதலை விட்டுக் கொடுத்தாரா அல்லது நாயகன் தன் கொள்கையை விட்டுக் கொடுத்தாரா என்பதை விளக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஜீ.வீ.சீனு.
படத்தை இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்திருக்கிறார் சீனு, இன்னொரு நாயகனாக நடித்திருக்கும் உதயராஜ் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். நந்தினி ஸ்ரீ நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சுஜிபாலா ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் சீனு " படத்தின் திரைக்கதை பிரச்சினைக்குரிய வகையில் இருப்பது போல தோன்றினாலும் யார் மனதையும் புண்படுத்தாமல் படத்தை எடுத்திருக்கிறோம். தணிக்கைக் குழுவினர் படத்திற்கு யூ சான்றிதழ் அளித்திருக்கின்றனர்" என்று கூறியிருக்கிறார்.
அடுத்த மாதம் படம் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, மும்பை மற்றும் சென்னை பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.
படத்தோட தலைப்புக்கு ரொம்ப யோசிச்சிருக்க மாட்டாங்க போல...