Don't Miss!
- News வல்லவர்களை..நல்லவர்களை..! இன்றைக்கு ரொம்ப முக்கியம்.. எடப்பாடி பழனிசாமி வைத்த முக்கிய கோரிக்கை..!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- Technology அள்ளி கொடுக்கும் Jio.. ப்ரீபெய்ட் திட்டங்களில் எக்ஸ்ட்ரா டேட்டா.. OTT.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குடிக்கு அடிமையான விருச்சிக காந்த்துக்கு மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை!
சென்னை: மீட்கப்பட்ட விருச்சிககாந்த் என்கிற நடிகர் பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் விருச்சிககாந்தாக நடித்தவர் பல்லு பாபு. தாய், தந்தை இறந்த பிறகு மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
அவரை நடிகர் தீனாவும், இயக்குனர் மோகனும் மீட்டனர்.
பாபு
நடிகர் தீனா பாபுவை அழைத்துச் சென்று வீட்டில் தங்க வைத்தார். பின்னர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, உடை, செல்போன் எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
குடிப்பழக்கம்
இரவு 8 மணியானால் பாபு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் எங்கே செல்கிறார் என்று பார்த்தால் ஒயின் ஷாப்புக்கு சென்று அங்கு வருபவர்களிடம் காசு கேட்டு மது அருந்தியுள்ளார்.
ஒயின்
பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை தீனா புரிந்து கொண்டார். குடித்த பிறகு பாபு சுவரை பார்த்து அவராக பேசுகிறாராம். அவர் ஆளே மாறி நடந்து கொள்கிறாராம்.
|
மறுவாழ்வு
தீனாவும், மோகனும் சேர்ந்து பாபுவை நாப்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். பாபுவை ஒரு மாதத்தில் குணப்படுத்திவிடலாம் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவை இயக்குனர் மோகன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர்
பாபுவின் நிலைமை பற்றி அறிந்து 25 இயக்குனர்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த பிறகு பாபு நிச்சயம் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.