Don't Miss!
- News லோக்சபா தேர்தல்: ஓபிஎஸ், தமிழிசை, கனிமொழி, சவுமியா, திருமா..தமிழகத்தின் 11 நட்சத்திர தொகுதிகள்!
- Sports எப்பா சாமி! இப்படி யாக்கர் போட்றாரு? முஸ்தபிசுர் போனாலும் இனி கவலையில்ல.. Gleeson பவுலிங் வீடியோ
- Lifestyle ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- Technology ஆஹா.. கொடுத்துவச்சவங்கயா Jio பயனர்கள்.. கிள்ளிக்கொடுக்காம அள்ளிக்கொடுக்கும் அம்பானி.. பெஸ்ட் பிளான்ஸ்..
- Finance 4.54 பில்லியன் வருட பழைய பொக்கிஷம்.. உள்ளிருந்து வந்த உஸ்ஸ் சத்தம்.. திறந்து பார்த்தவர்களுக்கு ஷாக்
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
குடிக்கு அடிமையான விருச்சிக காந்த்துக்கு மறு வாழ்வு மையத்தில் சிகிச்சை!
சென்னை: மீட்கப்பட்ட விருச்சிககாந்த் என்கிற நடிகர் பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதால் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பரத், சந்தியா நடித்த காதல் படத்தில் விருச்சிககாந்தாக நடித்தவர் பல்லு பாபு. தாய், தந்தை இறந்த பிறகு மனநலம் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.
அவரை நடிகர் தீனாவும், இயக்குனர் மோகனும் மீட்டனர்.
பாபு
நடிகர் தீனா பாபுவை அழைத்துச் சென்று வீட்டில் தங்க வைத்தார். பின்னர் வாடகைக்கு வீடு எடுத்து கொடுத்து, உடை, செல்போன் எல்லாம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
குடிப்பழக்கம்
இரவு 8 மணியானால் பாபு வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் எங்கே செல்கிறார் என்று பார்த்தால் ஒயின் ஷாப்புக்கு சென்று அங்கு வருபவர்களிடம் காசு கேட்டு மது அருந்தியுள்ளார்.
ஒயின்
பாபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதை தீனா புரிந்து கொண்டார். குடித்த பிறகு பாபு சுவரை பார்த்து அவராக பேசுகிறாராம். அவர் ஆளே மாறி நடந்து கொள்கிறாராம்.
|
மறுவாழ்வு
தீனாவும், மோகனும் சேர்ந்து பாபுவை நாப்பாளையத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். பாபுவை ஒரு மாதத்தில் குணப்படுத்திவிடலாம் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த வீடியோவை இயக்குனர் மோகன் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
இயக்குனர்
பாபுவின் நிலைமை பற்றி அறிந்து 25 இயக்குனர்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த பிறகு பாபு நிச்சயம் சினிமாவில் நல்ல நிலைக்கு வருவார் என்று நம்பப்படுகிறது.