இது என்னய்யா, ஐஸ்வர்யா ராய்க்கு வந்த சோதனை!
மும்பை: ஏ தில் ஹை முஷ்கில் படத்தால் அமிதாப் பச்சன் குடும்பத்தார் ஐஸ்வர்யா ராய் மீது இன்னும் கோபத்தில் தான் உள்ளார்களாம்.
கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஏ தில் ஹை முஷ்கில். படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது.
இந்த படத்தால் ஐஸ்வர்யா ராயின் வீட்டில் எரிமலை புகைந்து கொண்டிருக்கிறது.

ஐஸ்வர்யா
படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிர் கபூரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளது அவரின் மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சனை கோபம் அடைய வைத்துள்ளதாம்.

அமிதாப், அபி
அமிதாப் பச்சனும் சரி, அபிஷேக் பச்சனும் சரி யார், யார் படங்களையோ சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள். ஆனால் இருவருமே ஏ தில் ஹை முஷ்கிலை மட்டும் கண்டுகொள்ளவில்லை.

அமிதாப்
ஏ தில் ஹை முஷ்கில் ட்ரெய்லர் வெளியான வேகத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ஆனால் அமிதாபிடம் கேட்டதற்கு நான் இன்னும் ட்ரெய்லரை பார்க்கவில்லை என்றார்.

முத்தக் காட்சி
படத்தில் ஐஸ்வர்யா ராய் ரன்பிருடன் சேர்ந்து முத்தக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். ஆனால் நடித்து முடித்த பிறகு அந்த காட்சியை நீக்குமாறு அவர் கரண் ஜோஹாரிடம் தெரிவித்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











