Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- News கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அன்புச்செழியனை 'தே...' வார்த்தையால் திட்டியது ஏன்?: நடிகை பூர்ணா விளக்கம்
Recommended Video
சென்னை: பைனான்ஸியர் அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டியது குறித்து நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார்.
தனது மரணத்திற்கு பைனான்ஸியர் அன்புச்செழியன் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து தலைமறைவான அன்புச்செழியன் இதுவரை போலீஸ் கையில் சிக்கவில்லை.
கெட்ட வார்த்தை
பைனான்ஸியர் அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டிருந்தார் நடிகை பூர்ணா. கமெண்ட்டிலும் கெட்ட வார்த்தை பயன்படுத்தியிருந்தார் அவர்.
ட்வீட்
எனக்கு அன்புச்செழியனை தனிப்பட்ட முறையில் தெரியாது. அசோக் குமாரின் திடீர் மரணம் என்னை பாதித்துவிட்டது. நானும் அசோக் குமாரும் சேர்ந்து பணியாற்றியுள்ளோம் என்கிறார் பூர்ணா.
அசோக்
நான் அசோக் குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது குடும்ப உறுப்பினர்களை பார்த்து கவலை அடைந்தேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்று பூர்ணா தெரிவித்துள்ளார்.
கடிதம்
நான் அன்புச்செழியனிடம் பேசியது இல்லை. நான் கேட்டது மற்றும் அசோக் குமாரின் கடிதத்தில் அன்புவின் பெயர் இருந்ததை வைத்து நான் கோபப்பட்டேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் கோபத்தின் வெளிப்பாடே தவிர சர்ச்சை ஏற்படுத்த கூறியது அல்ல என்கிறார் பூர்ணா.